தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி
- தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி

INTRODUCTION

Natarajar Dhyanasabai Neyveli,
Sivapuram Complex,
Vellore Salai, Block-16,
Neyveli-607801.

email: ndsneyveli@gmail.com

This site is being hosted and maintained by Panniru Thirumurai Valarchi Kazhagam, Neyveli

Monday 23 October 2023

அன்னாபிஷேக விழா

 

மெய்யன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

 

வரும் 28.10.2023, சனிக்கிழமை அன்று, சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்நிகழ்வினை ஒட்டி, நமது ஆலய நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 வழக்கமாக, மாலை 4 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணிக்கு மகாதீபாராதனையுடன் நிறைவுறும் அன்னாபிஷேக நிகழ்வு முன்னதாகவே 2 மணிக்குத்தொடங்கி, மாலை 4.30 மணிக்கு மகாதீபாராதனையுடன் நிறைவுற்று, அன்னம் கலைத்து பிரசாதமாக வழங்கப்படும்.

 6.15 மணிக்கு நடைபெறும் திருமூலர் நன்னீராட்டு, முன்னதாகவே 5 மணிக்கும், இரவு 8.30 மணிக்கு நடைபெறும், குறுந்தேர் பிரகார உலா, மாலை 6.15 மணிக்கும் நடைபெறும்.

 மாலை 6, இரவு 8, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும் கால பூசை நிகழ்வுகள், இந்த மூன்று கால பூசைகளுமே மாலை 7 மணிக்குள் நிறைவுறும். இறை தரிசனத்திற்காக ஆலயம் 9 மணி வரை திறந்திருக்கும்.

 கால பூசைகள் நிறைவு பெற்ற பின்  திருமூலர் குருபூசைக்கான சிறப்பு நிகழ்ச்சியாக சொற்பொழிவு மாலை 7 மணிக்கு நடைபெறும்.

Thursday 19 October 2023

தேய்பிறை அஷ்டமி பூசை

 அருள்மிகு நடராஜர் தியானசபை, நெய்வேலி


எதிர்வரும் இரண்டு பிரதோஷ நாட்கள்

26.10.2023, ஐப்பசி 09ம் நாள், வியாழக்கிழமை

10.11.2023, ஐப்பசி 24ம் நாள், வெள்ளிக்கிழமை


பிரதோஷ நாட்களில் மாலை 4.30 மணி தொடங்கி பிரதோஷ பூஜை நடைபெறும். 

சாயரட்ச பூஜையில் மகாதீபாராதனையும், தொடர்ந்து பிரதோஷ நாதர் பிரகார உலாவும் நடைபெறும்.

பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள ரூ.120/- செலுத்திப் பெயரினைப் பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளவும்.

பிரகார உலா நிறைவுற்றதும் டோக்கனை செலுத்தி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

வெளியூர் அன்பர்கள் கூடுதலாக  ரூ.50/ சேர்த்து ரூ .170/- அனுப்பினால் தூதஞ்சல் ( கூரியர் ) மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

தொகை அனுப்ப வேண்டிய தொலைபேசி எண். 9443482023.


தேய்பிறை அஷ்டமி பூசை

வரும் 05.11.2023, ஞாயிற்றுகிழமை அன்று மாலை 6 மணிக்கு தேய்பிறை அஷ்டமி பூசை நடைபெற உள்ளது.

மேற்படி பூசையில் கலந்துகொண்டு பிரசாதம் பெற விரும்பும் பக்தர்கள் ரூ.120/- செலுத்தி பெயரினை பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளவும். 

நேரடியாக வரமுடியாதவர்கள்  (9443482023)என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு ரூ. 170/- ஆன்லைன் மூலமாக செலுத்தி பெயரினை பதிவு செய்து கொள்ளலாம். தெரிவிக்கும் முகவரிக்கு, பிரசாதம் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.